ஆப்நகரம்

உணவு இடைவேளையில் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்: பதறிப் போன வீரர்கள்!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர்களை மைதானத்திற்குள் சந்திக்கச்சென்ற ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 15 Feb 2021, 12:45 pm
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ind vs eng


மூன்றாம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தின் பாதுகாப்பு வேளியை தாண்டி இங்கிலாந்து வீரர்களை நோக்கி சென்றுள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் கொரோனோ பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் அந்த ரசிகரை சந்திக்க மறுத்துவிட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றி அழைத்துச்சென்றனர்.

சிஎஸ்கேவுக்கு செல்லப்போவது யார் யார்? கம்பீர் கணிப்பு!

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகரின் இதுபோன்ற செயல் இனிவரக்கூடிய போட்டிகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.
அஷ்வினிடம் சிக்கிய இங்கிலாந்து... சென்னையில் அடிக்கும் சுழல் காற்று!
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது வரை 173 ரன்கள் எடுத்துள்ளது 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கோலியும், அஸ்வினும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்