அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி துவங்கி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 5 பந்துகளில் 3 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பெரிய பார்ட்னர்ஷிப்:
இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா இருவரும் பிரமாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷிப் 87 பந்துகளில் 176 ரன்களை குவித்து அசத்தியது. டி20 கிரிக்கெட்டில், இந்தியாவின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்குமுன் 2017-ல் ரோஹித், ராகுல் 165 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
ஹூடா சதம்:
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஹூடா 55 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியாவுக்காக சதம் அடித்தோர் பட்டியலில் ரோஹித் ஷர்மா (4) கே.எல்.ராகுல் (2) ஆகியோருக்கு அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் (1) மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டார்.
அடுத்தடுத்து விக்கெட்:
அடுத்த சில நிமிடங்களிலேயே சூர்யகுமார் 15 (5) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். தொடர்ந்து சதம் அடித்த தீபக் ஹூடாவும் 104 (57 ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். இந்நிலையில் 19ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் இருவரும் அடுத்தடுத்து கோல்டன் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 227/7 ரன்களை சேர்த்தது. ஹார்திக் பாண்டியா 15 (9) கடைசிவரை களத்தில் இருந்தார்.
அயர்லாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய அயர்லாந்து அணியும் விடாமல் போராடியது. ஓபனர்கள் ஸ்டெர்லிங் 40 (18), பல்பிர்னி 60 (37) இருவரும் காட்டடி அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள்.
அடுத்து ஹேரி டெக்டரும் 39 (28) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார். இறுதியில் டக்ரீல், மார்க் அடைர் இருவரும் களத்தில் இருந்தபோது 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 14 ரன்கள் கசிந்தது. இறுதியில் 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
உம்ரான் நோ-பால்:
அப்போது பந்துவீசிய உம்ரான் மாலிக் முதல் இரண்டு பந்துகளிலும் டாட் வீசினார். இரண்டாவது பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு பந்துகளிலும் அடைர் பவுண்டரிகளை விளாசி, 4ஆவது பந்தில் சிங்கில் எடுத்தார். இதனால், கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு பந்துகளில் சிங்கில்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றது.
அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 221/5 ரன்களை அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் ஓபனர்களாக களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 5 பந்துகளில் 3 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பெரிய பார்ட்னர்ஷிப்:
இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா இருவரும் பிரமாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷிப் 87 பந்துகளில் 176 ரன்களை குவித்து அசத்தியது. டி20 கிரிக்கெட்டில், இந்தியாவின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்குமுன் 2017-ல் ரோஹித், ராகுல் 165 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
ஹூடா சதம்:
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஹூடா 55 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியாவுக்காக சதம் அடித்தோர் பட்டியலில் ரோஹித் ஷர்மா (4) கே.எல்.ராகுல் (2) ஆகியோருக்கு அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் (1) மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டார்.
அடுத்தடுத்து விக்கெட்:
அடுத்த சில நிமிடங்களிலேயே சூர்யகுமார் 15 (5) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். தொடர்ந்து சதம் அடித்த தீபக் ஹூடாவும் 104 (57 ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். இந்நிலையில் 19ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் இருவரும் அடுத்தடுத்து கோல்டன் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 227/7 ரன்களை சேர்த்தது. ஹார்திக் பாண்டியா 15 (9) கடைசிவரை களத்தில் இருந்தார்.
அயர்லாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய அயர்லாந்து அணியும் விடாமல் போராடியது. ஓபனர்கள் ஸ்டெர்லிங் 40 (18), பல்பிர்னி 60 (37) இருவரும் காட்டடி அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள்.
அடுத்து ஹேரி டெக்டரும் 39 (28) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்தார். இறுதியில் டக்ரீல், மார்க் அடைர் இருவரும் களத்தில் இருந்தபோது 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 14 ரன்கள் கசிந்தது. இறுதியில் 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
உம்ரான் நோ-பால்:
அப்போது பந்துவீசிய உம்ரான் மாலிக் முதல் இரண்டு பந்துகளிலும் டாட் வீசினார். இரண்டாவது பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு பந்துகளிலும் அடைர் பவுண்டரிகளை விளாசி, 4ஆவது பந்தில் சிங்கில் எடுத்தார். இதனால், கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு பந்துகளில் சிங்கில்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றது.
அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 221/5 ரன்களை அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.