ஆப்நகரம்

IND vs IRE 2nd T20 Weather: ‘இன்றும் மழை பெய்யுமா?’…பிட்ச் யாருக்கு சாதகம்: டாஸ் வென்றதால் வெற்றிதானா?

இந்தியா, அயர்லாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 12:12 pm
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் மழை காரணமாக ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Samayam Tamil இந்திய அணி


இதனால் 12 ஓவர்களை கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 108/4 ரன்களை சேர்த்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களிலேயே 111/3 ரன்களை சேர்த்து, அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதிலும் மழை குறுக்கீட அதிக வாய்ப்புள்ளதாக அயர்லாந்து வானிமை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “அயர்லாந்தில் செவ்வாய் அன்று மழைபெய்ய அதிக வாய்ப்புள்ளது. காலையில் மட்டுமல்ல போட்டி நடைபெறும் நேரத்திலும் மழைபெய்ய அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் 15-18 டிகிரி செல்சியஸ் அளவில்தான் வெப்பம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. போட்டி நடைபெறும் டப்லின் மைதானத்தில் 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 11 போட்டிகளில் சேஸ் செய்த அணிகள் மட்டுமே வென்றுள்ளன. 7 முறை முதலில் களமிறங்கிய அணி வெற்றிபெற்றது. ஒருமுறை மழை காரணமாக ஆட்டம் ரத்தாகியுள்ளது.

அந்த மைதானத்தில் சராசரி ஸ்கோர் 153 மட்டுமே. இதன்மூலம், இந்த பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்