ஆப்நகரம்

IND vs NZ: ‘எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு’…இந்த தவறை சரி செய்ததால்தான் வென்றோம்: நியூசி கேப்டன் பளிச்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற காரணம் என்ன என்பது குறித்து நியூசிலாந்து கேப்டன் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 Jan 2023, 10:37 am
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
Samayam Tamil மிட்செல் சாண்ட்னர்


இதில் ராஞ்சியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் பின் ஆலன் 35 (23), டிவோன் கான்வே 52 (35) ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் 59 (30) அரை சதம் அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். கிளென் பிலிப்ஸும் 17 (22) தனது பங்கிற்கு ரன்களை அடித்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176/6 ரன்களை அடித்தது.

இந்திய இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 47 (34), வாஷிங்டன் சுந்தர் 50 (28), கேப்டன் ஹார்திக் பாண்டியா 21 (20) ஆகியோர் மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தனர். ஓபனர்கள் கில் 7 (6), இஷான் கிஷன் 4 (5), திரிபாதி 0 (6) போன்றவர்கள் சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

நியூசிலாந்து கேப்டன் பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த நியூசிலாந்து அணிக் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், வெற்றிக்கான காரணம் குறித்துப் பேசினார். அதில், ‘‘நாங்கள் பந்துவீசும்போது, பந்துகள் அளவுக்கு அதிகமாகவே சுழன்றது. இது ஆச்சரியமாக இருந்தது. ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம்’’

‘‘டேரில் மிட்செல் அபாரமாக செயல்பட்டதால்தான் 176 ரன்களை அடிக்க முடிந்தது. இந்த ஸ்கோர் போதுமானது கிடையாது என்பது எங்களுக்கு தெரியும். ஆகையால், பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்த முடிவு செய்தோம். அப்படி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தியதால்தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது’’ எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்