நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் இந்திய அணிக்கு ராகுல் (56), கோலி (45), ஸ்ரேயஸ் ஐயர் (58*) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது மோதல்
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் (ஜனவரி 26) நடக்கிறது. இப்போட்டியில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியில் இடம் பெற இனி ரிஷப் பந்துக்கு வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர்.
இரண்டாவது மோதல்
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் (ஜனவரி 26) நடக்கிறது. இப்போட்டியில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியில் இடம் பெற இனி ரிஷப் பந்துக்கு வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர்.