ஆப்நகரம்

IND vs NZ: ‘சம்பவம் செய்த’…குட்டி தினேஷ் கார்த்திக்: கடைசி நேரத்தில் செம்ம ட்விஸ்ட்: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Jan 2023, 10:36 pm
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஒயிட் வாஷ் ஆன நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
Samayam Tamil நியூசிலாந்து அணி


ராஞ்சியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்டர்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இருப்பினும், ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை கட்டுப்படுத்தினார்கள்.

இதனால் துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட ஓபனர்கள் பின் ஆலன் 35 (23), டிவோன் கான்வே 52 (35) ஆகியோரைத் தவிர, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சாம்ப்மேன் 0 (4), கிளென் பிலிப்ஸ் 17 (22) ஆகியோர் தடுமாறி ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் டேரில் மிட்செல் 31 (21) ஆபாரமாக விளையாடி அசத்த ஆரம்பித்தார். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 6nb, 6, 6, 4, 0, 2, 2 என மிட்செல் ரன்களை குவித்தார். இதனால், 19 ஓவர்களில் 149/6 என இருந்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176/6 என ரன்களை குவித்தது.

இந்திய இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ஷுப்மன் கில் 7 (6), இஷான்கிஷன் 4 (8) ஆகியோர் ஸ்பின்னர்களுக்கு எதிராக படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ராகுல் திரிபாதி 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். இதனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டது.

அப்போது, பவர் பிளேவில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சாண்ட்னர் மெய்டன் வீசினார். இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 47 (34), ஹார்திக் பாண்டியா 21 (20) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி ஆட்டமிழந்தனர்.

சுந்தர் காட்டடி:

தொடர்ந்து தீபக் ஹூடா, ஷிவம் மாவி 2 (3) ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், இந்திய அணி 18 ஓவர்களில் 127/8 என திணறியது. இதனைத் தொடர்ந்து ஜாகப் டுபே வீசிய 19ஆவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். அந்த ஓவரில் 17 ரன்கள் சென்றது.

இறுதியில் 6 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டபோது, பெர்குஷன் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தாரால் ஒரு சிக்ஸர் மட்டும்தான் அடிக்க முடிந்தது, அந்த ஓவரில் 11 ரன்கள்தான் சென்றது. இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

சுந்தர் கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக்போல் செயல்பட்டு, 28 பந்துகளல் 5 பவுண்டரி, 3 சிக்ஸ்ர்கள் உட்பட 50 ரன்களை எடுத்து, 19.5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதுதான், சுந்தரின் முதல் டி20 அரை சதமாகும்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்