ஆப்நகரம்

நியூசிக்கு எதிரான 20 ஓவா் போட்டி: ரன் மழை பொழிந்த ரோகித், தவான்

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 202 ரன்களை குவித்தது.

Samayam Tamil 1 Nov 2017, 9:05 pm
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 203 ரன்களை குவித்தது.
Samayam Tamil ind vs nz 1st t20 new zealand needed 203
நியூசிக்கு எதிரான 20 ஓவா் போட்டி: ரன் மழை பொழிந்த ரோகித், தவான்


இந்தியா நியூசிலாந்து இடையேயான முதலாவது 20 ஓவா் போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் அறிமுக வீரா்களான ரோகித் ஷா்மாவும், ஷிகா் தவானும் நியூசிலாந்து வீரா்களின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தனா்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அறைசதம் கடந்து ரன்மழை பொழிந்தனா். தவான், ரோகித் இருவரும் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனா். 3வதாக களம் இறங்கிய பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தாா். 11 பந்துகளை எதிா்கொண்ட கேப்டன் கோலி 26 ரன்களும், தோனி 2 பந்துகளில் 7 ரன்களும் எடுத்தனா். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்