ஆப்நகரம்

IND vs SA:'டாஸ் வென்றது இந்தியா'...40 ஓவர்கள் போட்டி: பவர் பிளே போன்ற விதிமுறைகளில் மாற்றம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது.

Samayam Tamil 6 Oct 2022, 3:46 pm
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
Samayam Tamil தவன், பவுமா


இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா பங்கேற்க உள்ளது. போட்டிகள் இன்றும், அக்டோபர் 9,11 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. முதல் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்றப் பிறகு பேசிய ஷிகர் தவன், ''இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். மொத்தம் 6 பேட்டர்கள், 5 பௌலர்கள் என்ற திட்டத்தின்படி களமிறங்க உள்ளோம். 2 ஸ்பின்னர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்'' எனக் கூறினார்.

விதிமுறை என்ன?

40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ளது.
முதல் 8 ஓவர்கள் பவர் பிளே
இரண்டாவது பவர் பிளே அடுத்த 24 ஓவர்கள்
மூன்றாவது பவர் பிளே அடுத்த 8 ஓவர்கள்
ஒரு பௌலர் 8 ஓவர்கள் வரை மட்டுமே பந்துவீச முடியும்.

இந்திய அணி: ஷிகர் தவன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ராஜத் படிதர், இஷான் கிஷன்,ஷர்தூல் தாகூர், முகமது சிராஜ், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ்.

தென்னாப்பிரிக்க அணி: ஜனிமேன் மலான், டி காக், பவுமா, மார்க்கரம், க்ளாசின், டேவிட் மில்லர், பர்னல், மகாராஜ், ரபாடா, லுங்கி நெகிடி, ஷாம்சி

அடுத்த செய்தி

டிரெண்டிங்