ஆப்நகரம்

IND vs SA: ‘இத...இதத்தான் எதிர்பார்த்தோம்’…பார்முக்கு திரும்பிய ருதுராஜ்: இந்தியா ரன் குவிப்பு!

மூன்றாவது போட்டியில் இந்திய ஓபனர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Samayam Tamil 14 Jun 2022, 7:43 pm
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோற்று, சொதப்பிய நிலையில், தொடரை இழக்காமல் இருக்க மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
Samayam Tamil ருதுராஜ் கெய்க்வாட்


விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே சென்றது. அடுத்து பர்னல் வீசிய இரண்டாவது ஓவரிலும் 6 ரன்கள் தான் கசிந்தது.

ருதுராஜ் காட்டடி:

அவ்வளவுதான் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்கள் பறந்தன. குறிப்பாக ரபாடா வீசிய 3ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து அசத்தினார். அடுத்து, 4ஆவது ஓவரில் நோர்க்கியாவுக்கு எதிராக ருதுராஜ் தொடர்ந்து 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு, ரசிகர்களை பரவசமாக்கினார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் பிரிடோரியஸுக்கு எதிராக ருதுராஜ் சிக்ஸர் அடித்ததால், இந்தியா பவர் பிளே முடிவில் 57/0 ரன்களை குவித்தது.

தற்போதுவரை 8 ஓவர்கள் முடிந்துள்ளன. இந்தியா 76/0 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் 48 (28), இஷான் கிஷன் 24 (20) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்