ஆப்நகரம்

‘டான்’ ரோஹித், ரஹானே தாறுமாறு அடி... திருப்பியடிக்கும் இந்திய அணி!

ராஞ்சி : தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியாவின் ரோஹித் ஷர்மா, ரஹானே ஆகியோர் பதிலடி கொடுக்க, இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.

Samayam Tamil 19 Oct 2019, 2:38 pm
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து சொதப்பல் துவக்கம் அளித்தது.
Samayam Tamil Rohit Sharma


ரபாடா அசத்தல்:

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா மிரட்ட, இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. பின் இணைந்த ரஹானே , ரோஹித் ஜோடி திருப்பியடிக்க துவங்கியது.

வெறும் 14 மணி நேரத்தில் நினைவான சபாஷ் நதீமின் 15 ஆண்டு கனவு...!

சிக்சர் மழை...
உணவு இடைவேளைக்கு பின், தென் ஆப்ரிக்க பவுலர்களின் பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும், இரண்டாவது செஷனின் ரன் வேகத்தை அதிகரித்தனர். சீரான இடைவேளையில் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார்.


ரஹானே அபாரம்
ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரஹனேவும் அரைசதம் கடந்து மிரட்ட, இந்திய அணி இரண்டாவது செஷனை தங்கள் வசப்படுத்தினர். மூன்றாவது டெஸ்டின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (108), ரஹானே (74) அவுட்டாகமல் உள்ளனர்.

Proxy Captain: சொன்ன மாதிரியே டூப்பை அழைத்து வந்த டூ பிளஸிஸ்.....: அப்படியும் பலன் இல்ல...!

திருப்பு முனை..
இதுவரை மொத்தமாக முடிந்துள்ள இரண்டு செஷனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா ஒரு செஷனை கைப்பற்றி சமனில் உள்ளது. அடுத்து நடக்கவுள்ள மூன்றாவது செஷனை கைப்பற்றும் அணிக்கு போட்டியில் நல்ல திருப்புமுனையாக அமையும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்