ஆப்நகரம்

இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர்... மாயங்க் அகர்வால்...!

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால், விசித்திர சாதனை பட்டியலில் இணைந்தார்.

Samayam Tamil 3 Oct 2019, 3:22 pm
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது நாள், தேனீர் இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil Mayank Agarwal 5


மாயங்க் மிரட்டல்..
இப்போட்டியில் இந்திய வீரர் மாயங்க் அகர்வால் 215 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய 4வது இந்தியரானார்.

இரட்டை சதம் விளாசி வெளியேறிய மாயங்க்... : அசைக்க முடியாத நிலையில் இந்திய அணி!

யார்? யார்?...
முன்னதாக திலீப் சர்தேஷாய் 200* (எதிர்- நியூசி.,, 1965) வினோத் காம்ளி 224 (எதிர்- இங்கிலாந்து, 1993), கருண் நாயர் 303* (எதிர்- இங்கிலாந்து, 2016) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

காத்துல பறந்த மோதல்... டான் ரோஹித்துக்காக கதவு அருகே காத்திருந்த கோலி... !

இரண்டாவது வீரர்...
இந்திய மண்ணில் நடந்த முதல் டெஸ்ட் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் (210 ரன்கள்) உடன் மாயங்க் அகர்வால் இணைந்தார்.

தென் ஆப்ரிக்காவுக்கு மரண பயத்தை காட்டிய மாயங்க், ரோஹித்....: பல சாதனை தகர்த்து மிரட்டல்!

3வது இடம்...
இந்நிலையில் இந்திய அணிக்காக அறிமுக சதத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், மாயங்க் அகர்வால் 3வது இடம் பிடித்தார்.

கருண் நாயர் - 303* எதிர் - இங்கிலாந்து,. 2016/17
வினோத் காம்ளி - 224 எதிர் - இங்கிலாந்து, 1992/93
மாயங்க் அகர்வால்- 215, எதிர்- தென் ஆப்ரிக்கா, 2019/20

அடுத்த செய்தி

டிரெண்டிங்