ஆப்நகரம்

IND vs SL: ‘பெரிய கூத்து’…நோ-பாலில் ஆட்டமிழந்த மயங்க்: 9 விஷயங்கள் அடுத்தடுத்து நடந்ததால் பரபரப்பு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா துவக்கத்திலேயே விக்கெட்டை இழந்துள்ளது.

Samayam Tamil 12 Mar 2022, 2:47 pm
இந்தியா, இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இன்று பெங்களூரில் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக துவங்கியுள்ளது.
Samayam Tamil மயங்க் அகர்வால்


இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்றப் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, “முதலில் பேட் செய்ய விரும்புகிறோம். பிட்ச் வறண்டு காணப்படுகிறது. இதனால், முதலில் களமிறங்கினால் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அக்சர் படேல் தற்போது பிட்டாக இருப்பதால், ஜெயந்த் யாதவிற்கு மாற்றாக அணிக்குள் வந்துள்ளார். மற்றபடி மாற்றமில்லை” எனக் கூறினார்.

மயங்க் சொதப்பல்:

இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் ஓபனர்களாக ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினார்கள். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், இலங்கை அணி விக்கெட்களை வீழ்த்த போராடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பெர்ணான்டோ வீசிய 1.3ஆவது ஓவரை மயங்க் அகர்வால் எதிர்கொண்ட நிலையில் பந்து பேடில் பட்டது. இதனைத் தொடர்ந்து பௌலர், விக்கெட் கீப்பர் போன்றவர்கள் LBW அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட ஆரம்பித்தார்கள். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இந்நிலையில் பந்து பாய்ண்ட் திசையில் ஜெயவிக்ரமாவிடம் சென்றது. இதனைப் பார்த்த மயங்க் ரன் ஓட ஆரம்பித்தார்.



ரன் அவுட்:

ரோஹித் முதலில் ரன் ஓட ஆர்வம் காட்டிய நிலையில், அடுத்து ரன் ஓடாமல் எதிர்முனை கிரிஸில் நின்றுவிட்டார். இதனால், மயங்க் பிட்சின் நடுப்பகுதியில் நின்றிருந்த நிலையில், ஜெயவிக்ரமா விக்கெட் கீப்பரிடம் பந்தை த்ரோ செய்தார். அகர்வால் நடு பிட்சில் நின்றிருந்ததால், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, எவ்வித அவசரமும் காட்டாமல், நடுவரிடம் DRS முறையிட்டுவிட்டு, அதன்பிறகுதான் ரன் அவுட் ஆக்கினார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் முதலில் டிஆர்எஸ் எடுக்க முற்பட்டபோது, அது நோ-பால் எனத் தெரிய வந்தது. இன்சைட் எட்ஜும் கூட. இதனால் LBW அவுட்டிற்கு பதிலாக ரன் அவுட் வழங்கப்பட்டது. மயங்க் அகர்வாலும் 4 (7) நடையைக் கட்டினார்.

9 விஷயங்கள்:

இப்படி அந்த ஒரு பந்தில் மட்டும் மொத்தம் 9 விஷயங்கள் நடைபெற்றது. அதாவது, ‘இன் சைட் எட்ஜ், LBW அப்பீல், ரோஹித் எதிர்முனையில் ரன் ஓட ஆரம்பித்து அதன்பிறகு நின்றது, மயங்க் அதை நம்பி ஓட ஆரம்பித்தது, டிக்வெல்லா கைக்கு பந்து சென்றது, டிஆர்எஸ் எடுத்தது, அடுத்து ரன் அவுட் செய்தது, ஓவர் ஸ்டெப், நோபால், ரன் அவுட் என தொடர்ந்து 9 விஷயங்கள் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்