ஆப்நகரம்

‘புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான்’…தயவுசெஞ்சு மிஸ் பண்ணிடாதீங்க: தேர்வுக்குழு உறுப்பினர் பளிச்!

மாற்று வீரர் யார் என்பது குழு உறுப்பினர் பேசியுள்ளார்.

Curated byமதுரை சமயன் | Samayam Tamil 3 Mar 2022, 7:30 am
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
Samayam Tamil ind vs sl test ex selector devang gandhi opines who should bat at number three in mohali test
‘புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான்’…தயவுசெஞ்சு மிஸ் பண்ணிடாதீங்க: தேர்வுக்குழு உறுப்பினர் பளிச்!


இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 4ஆம் தேதி மொஹாலியில் துவங்கவுள்ளது. அடுத்து இரண்டாவது போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக தொடங்கி நடைபெறும்.

4 பேர் நீக்கம்:

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து சேத்தேஸ்வர் புஜாரா, அஜிங்கிய ரஹானே, விருத்திமான் சாஹா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்ததால்தான் நீக்கப்பட்டார்கள். மூன்றாவது இடத்தில் புஜாரா, 5ஆவது இடத்தில் ரஹானே ஆகியோர் விளையாடி வந்த நிலையில், அவர்களது இடத்திற்கு இளம் வீரர்கள் வந்துள்ளனர்.

தேவங் காந்தி

இதனால், இந்த இருவரும் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், புஜாராவுக்கான மாற்று வீரராக இனி இந்த இளம் வீரர்தான் இருப்பார் என முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் இடத்திற்கு சரியான மாற்று வீரர் ஷுப்மன் கில்தான். கில் இன்னமும் டெஸ்டில் சதமடிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் ஓபனர்களாகவும், ஷுப்மன் கில் ஒன் டவுன் பேட்ஸ்மேனாகவும் இருக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

ஷுப்மன் கில்

மேலும் பேசிய அவர், “ரஹானேவின் ஐந்தாவது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் அல்லது ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது’’ எனக் கூறினார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். மேலும், இலங்கைக்கு இது 300ஆவது டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்