ஆப்நகரம்

கத்துக்குட்டியை கதற கதற அழவைத்த இந்திய அணி: பயிற்சியில் மெகா வெற்றி!

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

TOI Sports 30 May 2017, 9:16 pm
லண்டன்: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Samayam Tamil ind won by 240 runs against bangladesh in warm up match in icc champions trophy
கத்துக்குட்டியை கதற கதற அழவைத்த இந்திய அணி: பயிற்சியில் மெகா வெற்றி!

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

இத்தொடரின் லீக் போட்டிகளுக்கு முன், இந்திய அணி தனது இரண்டாவது பயிற்சி போட்டியில், வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதில் ’டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹாசன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா (1) சொதப்பலாக வெளியேறினார். அடுத்து வந்த ரகானே (11) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷிகர் தவான் (60) அரைசதம் அடித்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக், 94 ரன்கள் எடுத்த போது ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேற, தொடர்ந்து வந்த பாண்டியா, அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்திய அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 324 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, துவக்கம் முதலே இந்திய வேகங்களை சமாளிக்க தடுமாறியது. அந்த அணியின் முஷ்பிகுர் (13), மெஹாதி (24), இஸ்லாம் (18) ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க, ரன்களை தாண்டவில்லை. இதையடுத்து பாதிக்கிணறைக்கூட தாண்ட முடியாத வங்கதேச அணி, 23.5 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்