ஆப்நகரம்

பிரகாசித்த பிரதீப்: ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங் வரிசை!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்துள்ளது.

TNN 27 Jul 2017, 12:24 pm
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்துள்ளது.
Samayam Tamil 7 at lunch on day 2 against sri lanka at galle
பிரகாசித்த பிரதீப்: ஆட்டம் கண்ட இந்திய பேட்டிங் வரிசை!


இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று காலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

தவான், புஜாரா சதம் அடித்ததால் வலுவான நிலையை எட்டிய இந்திய அணி இரண்டாவது நாளான இன்று ஆட்டத்தைத் தொடரந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. புஜாரா 153 ரன்களிலும் ரஹானே 57 ரன்களில் விரைவில் ஆட்டமிழந்தனர். பின் வந்த அஸ்வின் சுதாரித்து ஆடினாலும் 47 ரன்களில் அவரும் வீழ்ந்தார். சஹாவும் தடுமாற்றத்துடன் 16 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இலங்கை அணியின் நுவான் பிரதீப் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு சவாலாக விளங்கினார். அவர் தனது முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். லஹிரு குமாரா, ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாவது நாள் உணவு இடைவேளைக்குச் செல்லும் போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா 4 ரன்களுடனும் ரவிந்திர ஜடேஜா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்