ஆப்நகரம்

இலங்கை செல்ல ஒப்புக்கொண்ட பிசிசிஐ... ஆகஸ்டில் பயணத்தை துவங்கும் இந்திய டீம்!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 11 Jun 2020, 12:19 pm
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகள் 3 ஒருநாள், டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் ஜூன் - ஜூலை மாதம் பங்கேற்கயிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரும் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. உலகளவில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், அனைத்து கிரிக்கெட் தொடர்களுக்கு பெரிய பூட்டு போட்டுள்ளது.
Samayam Tamil Team India


இலங்கை கேள்வி
இதற்கிடையில் திட்டமிட்டபடி இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதை பிசிசிஐயிடம் இமெயில் மூலம் கேட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “இலங்கை கிரிக்கெட் போர்டு இமெயில் மூலம் பிசிசிஐயிடம் இருநாட்டு கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்புள்ளதா என கேள்வி கேட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்துதல் விதிகள் மற்றும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் பிசிசிஐ சார்பில் அரசின் விதிமுறைகள் மற்றும் முறையான பயண ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின் தான் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும் என தெரிகிறது.

பச்சைக்கொடி
இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அடி
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் ரத்து செய்யப்பட்டதால், தற்போது இந்திய தொடரும் ரத்தாகும் பட்சத்தில் இது இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஆனால் முன்னதாக 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்