ஆப்நகரம்

டபுள் செஞ்சுரியை தவறவிட்ட ரோஹித், : ஆதிக்கத்தை தொடரும் இந்திய அணி: கண்ணீர் வராத குறையா கதறும் பவுலர்கள்!

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய துவக்க வீரர் மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மாவின் சதம் கைகொடுக்க, இந்திய அணி வலுவான நிலையை எட்டியது.

Samayam Tamil 3 Oct 2019, 11:48 am
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் (115), மாயங்க் (84) அவுட்டாகாமல் இருந்தனர்.
Samayam Tamil Mayank Agarwal 2


மாயங்க் மிரட்டல்...
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். மாயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

மிரட்டிய மாயங்க் அகர்வால்.... : டெஸ்ட் அரங்கில் 86வது இந்தியராக இணைந்தார்!

கோட்டைவிட்ட ரோஹித்...
இந்நிலையில் ரோஹிஹ் ஷர்மா 176 ரன்கள் எடுத்த போது, மகராஜ் சுழலில் சிக்கினார். பின் வந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் மாயங்க் அகர்வால் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர, இரண்டாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 324 ரன்கள் என்ற வலுவான நிலையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்