ஆப்நகரம்

புத்தகத்தை படித்து, பேட்டிங்கை சிறப்பாக்கிக் கொள்ளும் மிதலி ராஜ் எப்படி தெரியுமா?

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ். இவர் உலகக் கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து போட்டியின் போது பேட்டிங் செய்வதற்கு முன்னர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தது பலரும் கவனிக்கும் செய்தியாகியுள்ளது.

TOI Sports 27 Jun 2017, 12:19 am
இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ். இவர் உலகக் கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து போட்டியின் போது பேட்டிங் செய்வதற்கு முன்னர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தது பலரும் கவனிக்கும் செய்தியாகியுள்ளது.
Samayam Tamil india cricket captain mithali raj calmly reads book before batting
புத்தகத்தை படித்து, பேட்டிங்கை சிறப்பாக்கிக் கொள்ளும் மிதலி ராஜ் எப்படி தெரியுமா?


இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை மோதும்.

இந்தியா பெண்கள் அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.



புத்தகம் படித்த கேப்டன்:
எப்போதும் தொடக்க வீரர்களுக்கு அடுத்ததாக களமிறங்குபவர் கேப்டன் மிதாலி ராஜ். இவர் இந்த போட்டியின் போது பேட்டிங் செய்ய தயாராக இருந்தார். தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மிதாலி பெவிலியனில் ஹாயாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இவரின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியது.





மிதாலி ராஜ் விளக்கம்:
இதுகுறித்து மிதாலி கூறும் போது,' ஃபீல்டிங் கோச் எனக்கு ரூமி குறித்து புத்தகங்களைக் கொடுத்தார். அதைதான் இங்கிலாந்து போட்டியின் போது படித்துக் கொண்டிருந்தேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனது மனதை அமைதிப்படுத்துகிறது. அதனால், சிறப்பாக பேட்டிங்கும் செய்ய முடிகிறது' என்று கூறியுள்ளார்.

இந்த போட்டியில் மிதாலி அரைசதம் கடந்து, தொடர்ந்து 7 அரைசதம் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்