இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பின்வரிசை பேட்ஸ்மேன் ரன்குவிப்பின் உதவியுடன் இந்திய அணி வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எதிர்நோக்கியுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாளான இன்று இந்திய அணியை ஆரம்பக்கட்ட பின்னடைவிலிருந்து மீட்ட புஜாரா 133 ரன்களிலும் ரஹானே 132 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த அஸ்வின் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பாண்டியா 20 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சஹாவும் ஜடேஜாவும் கூட்டு சேர்ந்து சீராக ரன் சேர்க்கவே அணியின் ஸ்கோர் தேனீர் இடைவேளைக்கு முன்பே 500 ரன்களைக் கடந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 553 ரன்கள் குவித்துள்ளது. சஹா 59 ரன்களுடனும் ஜடேஜா 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாளான இன்று இந்திய அணியை ஆரம்பக்கட்ட பின்னடைவிலிருந்து மீட்ட புஜாரா 133 ரன்களிலும் ரஹானே 132 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த அஸ்வின் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பாண்டியா 20 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சஹாவும் ஜடேஜாவும் கூட்டு சேர்ந்து சீராக ரன் சேர்க்கவே அணியின் ஸ்கோர் தேனீர் இடைவேளைக்கு முன்பே 500 ரன்களைக் கடந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 553 ரன்கள் குவித்துள்ளது. சஹா 59 ரன்களுடனும் ஜடேஜா 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.