ஆப்நகரம்

ஜாதவுக்கு சல்யூட்: கடைசி பந்தில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்ட வெற்றி!

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

TNN 22 Jan 2017, 9:58 pm
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.
Samayam Tamil india lose 3rd odi but kedar jadhav seals his spot in team india with a spectacular innings
ஜாதவுக்கு சல்யூட்: கடைசி பந்தில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்ட வெற்றி!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறுது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது இந்தியா.

இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. பின்னர் 322 ரன்களை சேஸ் செய்யும் இந்திய அணி முன்னணி வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்கள் ரஹானே (1), கே.எல்.ராகுல் (11) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறப்பாக விளையாடிய விராத் கோலி 55 ரன்களிலும் யுவராஜ் சிங் 45 ரன்களும் நடையைக் கட்டினர். பின் தோனியும் 25 ரன்களில் அவுட்டானர்.

அனுபவம் மிக்க முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாத காரணத்தால் இந்தியா தற்போது வெற்றிக்கான ஜோடி இல்லாமல் தடுமாறியது. ஆனால், அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெதார் ஜாதவ் 90(75) ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்

தொடர் நாயகன்: கெதார் ஜாதவ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்