ஆப்நகரம்

அரட்டிய இந்தியா, அலறிய ஆப்ரிக்கா: தொடரும் அதிர்ஷ்டத்தின் தேடல்!

இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 191 ரன்களுக்கு சுருண்டது.

TOI Sports 11 Jun 2017, 6:25 pm
லண்டன்: இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 191 ரன்களுக்கு சுருண்டது.
Samayam Tamil india need 192 runs to win against south africa
அரட்டிய இந்தியா, அலறிய ஆப்ரிக்கா: தொடரும் அதிர்ஷ்டத்தின் தேடல்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

லண்டனில் நடக்கும் மிக முக்கியமான 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் ஆம்லா (35), டிகாக் (53) சுமாரான துவக்கம் அளித்தனர்.

இரட்டை அடி:
இதன் பின் வந்த டிவிலியர்ஸ் (16), மில்லர் (1) என இரண்டு பேரும் ரன் அவுட்டாகி வெளியேறினர். இவர்களை ரன் அவுட்டாக்கி விட்ட டுபிளசி (36) தாக்குபிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த மோரிஸ் (4), பிளிக்வாயோ (4) ரபாடா (5) என யாரும் தாக்குபிடிக்கவில்லை.

பின் வரிசை வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, தென் ஆப்ரிக்க அணி, 44.3 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில், புவனேஷ்வர் குமார், பும்ரா அதிக பட்சமாக தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்