ஆப்நகரம்

ஷர்துல் தாகூரின் வேகத்தில் சுருண்டது தென் ஆப்ரிக்கா; இந்தியாவிற்கு இலக்கு 205!

கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியாவிற்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2018, 8:13 pm
செஞ்சூரியன்: கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியாவிற்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil india need 205 runs to win against sa in last odi match
ஷர்துல் தாகூரின் வேகத்தில் சுருண்டது தென் ஆப்ரிக்கா; இந்தியாவிற்கு இலக்கு 205!


தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 6 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை வென்றது.

இந்நிலையில் 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அதிகபட்சமாக கயா ஸோண்டா 54 ரன்களும், அண்டிலே பிலுக்வாயோ 34 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்களையும், பாண்டியா மற்றும் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

50 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்களையும் இழந்து தென் ஆப்ரிக்க அணி 204 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

India need 205 runs to win against SA in last ODI match.

அடுத்த செய்தி

டிரெண்டிங்