ஆப்நகரம்

மூன்றாவது டெஸ்டில் அதிரடியாக அரைசதம் அடித்தார் முரளி விஜய்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது

TNN 2 Dec 2017, 12:11 pm
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
Samayam Tamil india off to a steady start as vijay scored a fifty in the third test
மூன்றாவது டெஸ்டில் அதிரடியாக அரைசதம் அடித்தார் முரளி விஜய்!


இந்தப் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் ராகுலுக்குப் பதிலாக தவான் களமிறங்கினார். சென்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்க்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, உமேஷ் யாதவ்க்கு பதிலாக முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

சிறப்பாக ஆரம்பித்த தவான் 23 ரன்கள் எடுத்திருந்தபோது பெராரா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாராவும் 23 ரன்கள் எடுத்த போது காமாஜ் பந்தில் அவுட்டானார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் அரை சதம் அடித்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 51 ரன்களுடனும் கோலி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்