ஆப்நகரம்

லாக்டவுன் காலத்தில் செஃப்பாக மாறிய மாயங்க் அகர்வால்!

புதுடெல்லி: இந்திய துவக்க வீரர் மாயங்க் அகர்வால் லாக்டவுன் நேரத்தில் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 8:47 am
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா முழுது 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில் பலரும் தங்களின் தனிப்பட்ட திறமையை சமூக வலைதளத்தின் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil மாயங்க் அகர்வால்


செஃப் மாயங்க்
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் செஃபாக மாறிய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மாயங்க் அகர்வால் பட்டர் பூண்டு காளான் மற்றும் குடை மிளகாய் சமைத்தார். மேலும் அதன் செய் முறை விளக்கத்தையும் மாயங்க் அந்த வீடியோவில் தெரிவித்தார்.


பொழுது போக்கு
விளையாட்டு போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், நட்சத்திரங்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அவர்களுடன் தங்களுக்கு பிடித்த பொழுது போக்கை கொண்டு நேரம் செலவிடுகின்றனர். மேலும் சிலர் தங்களின் வழக்கமான உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்து வருகின்றனர். அதை வீடியோக்களாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டாவது உலக போருக்குப் பின் முதல் முறையாக விம்பிள்டன் தொடர் ரத்து !

அடுத்த செய்தி

டிரெண்டிங்