ஆப்நகரம்

கடைசி டெஸ்ட்: இந்திய அணி முதலில் பேட்டிங்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

TNN 12 Aug 2017, 10:19 am
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Samayam Tamil india opt to bat againt sl in 3rd test
கடைசி டெஸ்ட்: இந்திய அணி முதலில் பேட்டிங்


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் எளிதாக வென்ற இந்திய அணி தொடை வென்று அசத்தியது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஆரம்பிக்கிறது.

பெல்லகலேயில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்றுள்ளார். ஜடேஜாவுக்கு இப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

இலங்கை அணியில் ஹெராத், பிரதீப், தனஞ்சயா ஆகியோருக்குப் பதிலாக லக்ஷன், குமாரா, பெர்னான்டோ ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்