ஆப்நகரம்

சச்சின் சாதனை முறியடிப்பு: ஆஸிக்கு 303 ரன்கள் இலக்கு!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் அடித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 1:05 pm
கான்பெராவில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 302 ரன்கள் அடித்துள்ளது. துவக்க வீரர்களாக ஷிகர் தவன், ஷுப்மன் கில் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றனர். இருப்பினும், சீன் அபோட் சிறப்பாகப் பந்துவீசி, 16 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவனை வெளியேற்றினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 33 ரன்கள் சேர்த்து ஆஸ்டன் அகரின் சுழலில் சிக்கினார்.
Samayam Tamil ind vs aus


மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை (242 இன்னிங்ஸ்) அதிவிரைவாக எட்டிய முதல் வீரராக மாறினார். இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். தற்போது அது தகர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர் (19), கே.எல்.ராகுல் (5) வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால், இந்திய அணி 152 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

நடராஜன் சேர்ப்பு: இந்திய அணி பேட்டிங் தேர்வு!

அடுத்ததாகக் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 92 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 66 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 302 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2-0 எனத் தொடரைக் கைப்பற்றிவிட்டது. கான்பெரா மைதானத்தில் கடைசி 7 போட்டிகளில் முதலில் களமிறங்கிய அணியே வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்