ஆப்நகரம்

சிஎஸ்கே தோற்றாலும் உலக கோப்பையை வென்ற சென்னை பசங்க...

இங்கிலாந்தில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சென்னையை சேர்ந்த தெருவோர குழந்தைகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

Samayam Tamil 14 May 2019, 5:02 pm
இங்கிலாந்தில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சென்னையை சேர்ந்த தெருவோர குழந்தைகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.
Samayam Tamil Support the Street Child Cricket World Cup


இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொண்ட தெருவோர குழந்தைகள் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

சென்னையிலிருந்து தொண்டு நிறுவன உதவியுடன் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் ஆட சென்ற சென்னை குழந்தைகள் சூரிய பிரகாஷ், பால்ராஜ், நாகலெட்சுமி, மோனிசா ஆகியோர் சாம்பியன் ஆகியுள்ளனர்.

MI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை

Shikhar Dhawan: ரோகித் சர்மா என் பொண்டாட்டியா? - சிகர் தவான்


அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளனர்.

Kuldeep Yadav: தோனி பெரும்பாலும் தவறான ஆலோசனை தான் கொடுப்பார் தெரியுமா? - கொதிக்கும் குல்தீப் யாதவ்

இந்தியா சார்பில் இரண்டு அணிகள் வட இந்திய அணி சார்பாக மும்பையை சேர்ந்த 4 குழந்தைகள் பங்கேற்றனர். தென் இந்திய அணி சார்பாக சூரிய பிரகாஷ், பால்ராஜ், நாகலெட்சுமி, மோனிசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்


சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய தென் அணியான சென்னை அணி சார்பில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்