ஆப்நகரம்

முத்தரப்பு டி20: ’டான்’ ரோஹித் தலைமையில் இளம் இந்திய அணி, இலங்கையுடன் இன்று மோதல்!

முத்தரப்பு டி20யின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

Samayam Tamil 6 Mar 2018, 8:38 am
கொழும்பு: முத்தரப்பு டி20யின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
Samayam Tamil india srilanka bangladesh tri series starts from today
முத்தரப்பு டி20: ’டான்’ ரோஹித் தலைமையில் இளம் இந்திய அணி, இலங்கையுடன் இன்று மோதல்!


இலங்கையின் 70வது சுதந்திர தினம், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இன்று தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

மார்ச் 8 - இந்தியா vs வங்கதேசம்

மார்ச் 10 - இலங்கை vs வங்கதேசம்

மார்ச் 12 - இந்தியா vs இலங்கை

மார்ச் 14 - இந்தியா vs வங்கதேசம்

மார்ச் 16 - இலங்கை vs வங்கதேசம்

மார்ச் 18 - இறுதிப்போட்டி


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார்.

கொழும்புவில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கோலி தலைமையில் தென் ஆப்ரிக்காவில் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதித்தது.

That's what the three teams are playing for - The Nidahas Trophy which is all set to begin from the 6th of March 2018 #TeamIndia pic.twitter.com/MO8gGuTdWz — BCCI (@BCCI) March 5, 2018 இதேபோல் ரோஹித் தலைமையிலான இளம் அணியினர், இலங்கையில் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India, Srilanka, Bangladesh tri series starts from today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்