ஆப்நகரம்

இந்தூர் டெஸ்ட் : விராத் கோஹ்லி சதம் : வலுவான நிலையில் இந்தியா !

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார்.

TOI Sports 8 Oct 2016, 5:08 pm
இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார்.
Samayam Tamil india steady as kohli reaches fifty
இந்தூர் டெஸ்ட் : விராத் கோஹ்லி சதம் : வலுவான நிலையில் இந்தியா !


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி, வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, முரளி விஜய், காம்பிர் ஜோடி சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் துவக்கள் அளித்தது. இருப்பினும் இந்த ஜோடி ஜொலிக்க தவறியது. முதலில் விஜய் (10) அவுட்டாக, தொடர்ந்து காம்பீரும் (29) பெவிலியன் திரும்பினார். பின் வந்த புஜாரா (41) ஓரளவு கைகொடுத்தார்.

இதன் பின் இணைந்த ரகானே, விராத் கோஹ்லி ஜோடி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த விராத் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 13வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரகானேவும், அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில்,. இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (103), ரகானே (79) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்