ஆப்நகரம்

அடுத்தடுத்து அடித்த அஷ்வின், ஜடேஜா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

TOI Sports 24 Sep 2016, 9:53 am
கான்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.
Samayam Tamil india strike early to get latham taylor
அடுத்தடுத்து அடித்த அஷ்வின், ஜடேஜா!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இது இந்திய அணி பங்கேற்கும் 500வது டெஸ்ட் போட்டியாகும்.

இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 318 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கம் முதல் அஷ்வின், ஜடேஜாவின் சுழற்பந்து தாக்குதலை துவங்கினார்.இந்திய கேப்டன் விராத் கோஹ்லி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அஷ்வின் சுழலில் முதலில் லதாம் (58) அவுட்டானார். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லரை (0) அடுத்த ஓவரிலேயே ஜடேஜா பெவிலியனுக்கு அனுப்பினார். தொடர்ந்து கேப்டன் வில்லியம்சனும் (75) அஷ்வின் சுழலில் போல்டானார்.

மூன்றாவது நாள் உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. ரான்கி (5), சாட்னர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்