ஆப்நகரம்

மாயங்க் அகர்வால் அபார இரட்டை சதம்.... இந்திய அணி வலுவான முன்னிலை!

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மாயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது.

Samayam Tamil 15 Nov 2019, 3:51 pm
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்கிறது. இதில் வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து 64 ரன்கள் பின்தங்கியிருந்தது.
Samayam Tamil Mayank Agarwal


புஜாரா அரைசதம்...
இதையடுத்து இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, புஜாரா (54) அரைசதம் கடந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி டக்- அவுட்டாகி ஷாக் கொடுத்தார்.


அகர்வால் அசத்தல்...
அடுத்து வந்த ரகானே கைகொடுக்க, எதிர்முனையில், மாயங்க் அகர்வால் தனது அசத்தலான ஆட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து இரண்டாவது நாள் தேனீர் இடைவேளைக்கு பின் இந்திய அணி, முதல் இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 365 ரன்கள் எடுத்து 215 ரன்கள் முன்னிலை பெற்றது.

சகா பிடித்த ஸ்பெஷல் ‘300’... எவ்வளவு சாதனை இருக்கு தெரியுமா?

ராசியான நவம்பர்...
இந்நிலையில் இந்திய வீரர் மாயங்க் அகர்வாலுக்கு நவம்பர் மாதம் மிகவும் ராசியான மாதமாக தெரிகிறது. கடந்த 2017ல் நவம்பர் மாதத்தில் மட்டும் மாயங்க் 1000 ரன்கள் அடித்து அசத்தினார். தற்போது, தனது 12வது டெஸ்ட் இன்னிங்சில் 6வது முறையாக அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.


ரஹானே காயம்...
இதற்கிடையில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்த போது, 32 ரன்கள் எடுத்திருந்த ரஹானே, ரன் எடுக்க ஓடிய போது காலில் தடைபிடிப்பு ஏற்பட்டது. இதற்காக முதலுதவி எடுத்துக்கொண்ட ரஹானே, பின் தொடர்ந்து விளையாடினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்