ஆப்நகரம்

WTC Final: இந்திய அணி அறிவிப்பு…‘2 இளம் வீரர்களுக்கு ஜாக்பாட்’…ஓபனிங் ஜோடி உறுதி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jun 2021, 8:19 pm
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல்முறையாக இத்தொடர் நடைபெறவுள்ளதால், இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Samayam Tamil இந்திய அணி


இந்நிலையில் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பேர் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், 15 வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷுபமன், முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதில் கிட்டதட்ட அனைவரும் எதிர்பார்த்த பேட்டிங் வரிசையைத்தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஓபனர்களுக்கான இடத்தில் ரோஹித் ஷர்மா, ஷுபமன் கில் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருவரும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ரோஹித்-கில் ஜோடிதான் ஓபனர்கள் என்பது உறுதியாகிவிட்டது.

மேலும் சேத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா ஆகியோர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜஸ்பரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதனால், பந்துவீச்சைப் பொறுத்தவரை யார்யார் களமிறங்குவார்கள் என்பதை தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியாத நிலை இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்