ஆப்நகரம்

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய சாம்பியன்ஸ் ரெடி : பிசிசிஐ

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

TOI Sports 7 May 2017, 12:55 pm
புதுடெல்லி : ஜூன் 1ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என இன்று நடந்த சிறப்பு பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil india to participate in icc champions trophy
சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய சாம்பியன்ஸ் ரெடி : பிசிசிஐ


வருமானத்தில் பங்கை பிரிப்பதில் ஐசிசி.,க்கும் பிசிசிஐ.,க்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா அணியை அறிவிப்பதில் தாமதம் காட்டிவந்தது பிசிசிஐ.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் அணியை அறிவிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25ம் தேதி முடிந்தும் பிசிசிஐ மட்டும் இந்திய அணியை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்