ஆப்நகரம்

இளம் இந்திய அணியும் ஆசிய கோப்பை வெல்லவது உறுதி - இலங்கைக்கு 305 ரன்கள் இலக்கு

சீனியர் அணியைப் போல, ஜூனியர் அணியும் இந்தாண்டு ஆசிய கோப்பை வெல்லும் என தெரிகிறது. இறுதிப் போட்டியில் இந்தியா 305 ரன்கள் இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2018, 4:34 pm
டாக்கா : 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil asia cup


வங்கதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகின்றன.
இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகள் விளையாடுகின்றன.

இந்தியா ஆதிக்கம்:
இந்த தொடரின் லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணிகள் 3போட்டிகளில் மூன்றிலும் வென்று இறுதிக்கு முன்னேறியது.

305 ரன் இலக்கு :
டாக்காவில் இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்களான யாசஸ்வி ஜெய்ஸ்வால் 85, அனூஜ் ராவத் 57, தேவ்தத் பதக்கால் 31, கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 65*, ஆயுஷ் பாடோனி 52* அடிக்க, 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.



இந்தியாவுக்கு கோப்பை :
இந்திய கிரிக்கெட் சீனியர் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதியில் வங்கதேசததை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது.

இதே போல் இன்று 19 வயத்துகுட்பட்ட இலங்கை அணிக்கு எதிராக இளம் இந்திய அணி 304 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை வெற்றி பெற 305 ரன் தேவை என்பதால் இந்தியா கோப்பையை வென்று சாதிக்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்