ஆப்நகரம்

'ஐபிஎல் டயர்ட்'...இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு: ரோஹித், கோலிக்கு ஹேப்பி நியூஸ்..ரசிகர்கள் சோகம்!

இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 6 Jun 2023, 3:13 pm
இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் விளையாடி வருகிறார்கள். இதன் காரணமாக, வீரர்களுக்கு ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதால், சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
Samayam Tamil இந்திய அணி


கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, உடனே இந்திய அணி நவம்பர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கியது. அடுத்து, டிசம்பர் மாதத்தில் வங்கதேச சுற்றுப் பயணம், தொடர்ந்து ஜனிவரியில் இலங்கை, நியூசிலாயது தொடரிலும் இந்தியா பங்கேற்று விளையாடியது.

பைனல்:

அடுத்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றது. இது முடிந்த உடனே மே மாதம் வரை ஐபிஎல் 16ஆவது சீசனில் இந்திய வீரர்கள் பங்கேற்றார்கள். இது தற்போது முடிந்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் வீரர்கள் ஜூன் 7 முதல் 11ஆம் தேதிவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட உள்ளது.

ஒரு மாதம் ஓய்வு:

இப்படி, இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து 7 மாதங்களாக ஓய்வே இல்லாமல் விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு மாதம் ஓய்வு கிடைக்கவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிந்த உடனே, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்திய தொடர் ஒத்தி வைப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஜூன் 12 முதல் ஜூலை 11ஆம் தேதிவரை, இந்திய அணி வீரர்கள் எந்த தொடரிலும் விளையாட மாட்டார்கள். இதனால், அவருகளுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில்தான் இந்தியா விளையாட உள்ளது.

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதற்குமுன், ஓய்வு தேவைப்படுவதாக வீரர்கள் கோரிக்கை முன் வைத்ததால்தான், ஒருமாதம் ஓய்வு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்