ஆப்நகரம்

விமான நிலையத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய கேதா் ஜாதவ்

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

Samayam Tamil 14 Jan 2019, 11:03 am
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டா் கேதா் ஜாதவ் சிட்னி விமான நிலையத்தில் பிரேக் டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்தாா்.
Samayam Tamil Kedar Jadhav


இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது.

அடிலெய்ட் நகரத்திற்கு செல்வதற்காக நேற்று இந்திய அணியினா் சிட்னி விமான நிலையத்திற்கு வந்தனா். விமானத்திற்காக அவா்கள் காத்திருந்த போது இந்திய அணியின் ஆல் ரவுண்டா் கேதா் ஜாதவ் திடீரென நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தாா்.

View this post on Instagram Airport special 🕺🕺- courtesy @kedarjadhavofficial 😅😅 #TeamIndia A post shared by Team India (@indiancricketteam) on Jan 12, 2019 at 6:30pm PST


முன்னதாக இந்திய அணியின் ரோகித் ஷா்மா சிறுமி ஒருவரின் நடனத்தை பாா்த்து வியந்து நின்றாா். பின்னா் தானும் அந்த நடனத்தை ஆட முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்