டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தப் பிறகு இந்திய சீனியர் வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இளம் இந்திய அணிதான் அங்கு சென்றிருந்தது.
இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.
ஒருநாள் தொடர்:
இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்கி நடைபெறும்.
டெஸ்ட் தொடர்:
இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும்.
முதல் ஒருநாள் போட்டி:
முதல் ஒருநாள் போட்டி நாளை டாக்காவில் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், சஞ்சு சாம்சனை உட்கார வைத்ததுபோல், சில சீனியர் வீரர்களையும் வெளியில் உட்கார வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓபனர் இடத்திற்கு போட்டி:
குறிப்பாக ஓபனர்களுக்கான இடங்களில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ரோஹித், கே.எல்.ராகுல் இருவரும் கேப்டன், துணைக் கேப்டன் என்பதால், இருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதனால், நியூசிலாந்து தொடரில் கேப்டனாக இருந்த ஷிகர் தவன் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிடில் வரிசை, ஆல்-ரவுண்டர்கள்:
அடுத்து மிடில் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்தும், ஆல்-ரவுண்டர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹார், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்படலாம்.
இந்திய உத்தேச லெவன் அணி: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், முகமது ஷமி, முகமது சிராஜ்.
இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.
ஒருநாள் தொடர்:
இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்கி நடைபெறும்.
டெஸ்ட் தொடர்:
இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும்.
முதல் ஒருநாள் போட்டி:
முதல் ஒருநாள் போட்டி நாளை டாக்காவில் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், சஞ்சு சாம்சனை உட்கார வைத்ததுபோல், சில சீனியர் வீரர்களையும் வெளியில் உட்கார வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓபனர் இடத்திற்கு போட்டி:
குறிப்பாக ஓபனர்களுக்கான இடங்களில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ரோஹித், கே.எல்.ராகுல் இருவரும் கேப்டன், துணைக் கேப்டன் என்பதால், இருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதனால், நியூசிலாந்து தொடரில் கேப்டனாக இருந்த ஷிகர் தவன் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிடில் வரிசை, ஆல்-ரவுண்டர்கள்:
அடுத்து மிடில் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்தும், ஆல்-ரவுண்டர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹார், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்படலாம்.
இந்திய உத்தேச லெவன் அணி: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், முகமது ஷமி, முகமது சிராஜ்.