ஆப்நகரம்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு...: 6.30 மணிக்கு இறுதி முடிவு!

புதுடெல்லி: அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதல் டி-20 போட்டியை நடத்துவது குறித்து இறுதி முடிவு மாலை 6.30 மணிக்கு எடுக்கப்படும் என தெரிகிறது.

Samayam Tamil 3 Nov 2019, 4:02 pm
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடக்கிறது. ஆனால் , அதிகரிக்கும் காற்று மாசு இப்போட்டிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
Samayam Tamil Ind vs Ban


பள்ளிகளுக்கு விடுமுறை...
இதற்கிடையில் ஆபத்தான அளவுக்கு மேல் காற்று மாறு நிலவுவதால் அங்கு வரும் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் போட்டியை நடத்துவது குறித்து போட்டி நடுவர், அம்பயர்களுடன் ஆலோசனை செய்து , மாலை 6.30 மணியளவில் இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது.

எவ்வளவு...
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில், மாசு அளவு 473 ஆக இருந்தது. அதேநேரம், அருண் ஜெட்லி மைதானத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில், இந்த அளவு 488 ஆகவுள்ளது. இதனால் அடர்த்தியான மாசு காரணமாக டெல்லியின் விமான சேவையும் பாதிக்கப்பட்டு ள்ளது.


இறுதி முடிவு...
போட்டி மாலை 7.00 மணியளவில் துவங்குவதால், மாலையில் மாசு அளவு குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் டாஸ் போடுவதற்கு முன்பாக (6.30 மணி) போட்டி நடுவர், அம்பயகளுடன் ஆலோசனை செய்து, போட்டியை நடத்துவதா இல்லை ரத்து செய்வதா என இறுதி முடிவு எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்