ஆப்நகரம்

4வது டெஸ்ட்: பட்லர் அதிரடியால் இந்தியாவை விட 233 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து!

ஜோஸ் பட்லர் நிலையான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

TIMESOFINDIA.COM 1 Sep 2018, 11:47 pm
சவுதாம்டன்: ஜோஸ் பட்லர் நிலையான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.
Samayam Tamil Buttler


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதாம்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்திய அணி, 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ஆம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 233 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. சாம் கர்ரென் 37 ரன்களுடன் களத்திற்கு இருக்கிறார். அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 69, ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் முகமதி சமி 3, இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி ஆட்டமிழந்து இந்திய அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஏற்கனவே ஒரு போட்டியில் வென்றுள்ள இந்திய அணி, இம்முறையும் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். அதேசமயம் 250க்குள் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தால், இந்தியாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

India vs England, 4th Test Buttler scores 69 as England extend lead to 233.

அடுத்த செய்தி

டிரெண்டிங்