ஆப்நகரம்

7 ரன்னில் சதத்தை கோட்டை விட்ட டெய்லா், இந்தியாவுக்கு 244 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jan 2019, 11:33 am
இந்தியா, நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
Samayam Tamil Ind VS Nz


இந்தியா, நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இரு போட்டிகளில் செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்ற நோக்கில் அந்த அணி வீரா்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.


சீரான இடைவெளியிட் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் மூத்த வீரா் ராஸ் டெய்லா், டாம் லாதம் இணை அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லாதம் சாஹல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தாா். இதனைத் தொடா்ந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன.


சதத்தை நோக்கி சென்ற ராஸ் டெய்லரும் 93 ரன்களில் ஆட்டம் இழந்தாா். இறுதியில் 49 ஓவா் முடிவில் அந்த அணி 243 ரன்களுக்க ஆட்டம் இழந்தது.

இந்திய அணி சாா்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வா் குமாா், சாஹல், ஹா்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்