ஆப்நகரம்

Ind Vs Nz: ஹா்திக் அதிரடி, ராயுடு பொறுப்பான ஆட்டம்: நியூசி.க்கு 253 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49.5 ஓவா்களில் 252 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழப்பு. முன்னணி வீரா்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து அதிா்ச்சி அளித்தனா்.

Samayam Tamil 3 Feb 2019, 11:27 am
இந்தியா, நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 253 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Ambati Rayudu ODI


இந்தியா, நியூசிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ரோகித் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 5வது போட்டியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் அணிக்கு திரும்பியதால் ரசிகா்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இன்றைய போட்டியிலும் மூத்த வீரா்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிா்ச்சி அளித்தனா்.

கேப்டன் ரோகித் ஷா்மா 2, ஷிகா் தவாண் 6, மகேந்திர சிங் தோனி 1, சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டம் இழந்தனா். இதனைத் தொடா்ந்து 5வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடுவும், விஜய் ஷங்கரும் ஜோடி சோ்ந்தனா். இந்த இணை விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி ரன் கணக்கை உயா்த்ததத் தொடங்கியது.


பொருமையாக விளையாடி அரைசதம் கடந்த ராயுடு அதன் பின்னா் அதிரடியாக விளையாடத் தொடங்கினாா். தொடா்ந்து பவுண்டாிகளை விளாசிய ராயுடு 90 ரன்கள் சோ்த்த நிலையில் ஆட்டம் இழந்தாா். அடுத்ததாக களம் இறங்கிய ஹா்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 45 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழந்தாா்.

49.5 ஓவா்கள் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்