இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 345/10 ரன்கள் சேர்த்தது. ஷரேயஸ் ஐயர் 105 (171) சதமடித்து அசத்தினார்.
அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் டாம் லதாம் 95 (282), வில் யங் 89 (214) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். மற்றவர்கள் யாரும் சிறப்பாக சோபிக்காததால், நியூசிலாந்து அணி 296/10 ரன்கள் சேர்த்து, 49 ரன்கள் பின்தங்கியது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 84/5 ரன்கள் சேர்த்து, 133 ரன்கள் முன்னிலை பெற்றபோது நான்காவது நாள் முதல் செஷன் முடிவுக்கு வந்தது.
நான்காவது நாள் 2ஆவது செஷன்:
முதல் செஷன் முடிவின்போது ஷ்ரேயஸ் ஐயர் 18 (51), ரவிச்சந்திரன் அஸ்வின் 20 (35) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். இரண்டாவது செஷனின் துவக்கத்திலும் பார்ட்னர்ஷிப் தொடர்ந்தது. இதனால் இந்திய அணி 100 ரன்களை கடந்து சிறப்பான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. அந்த சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 32 (62) விக்கெட்டை கைல் ஜேமிசன் எடுத்துக்கொடுத்தார்.
அடுத்து, நீண்ட நேரத்திற்கு விக்கெட் எதுவும் விழவில்லை. ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அசத்தினார். இந்நிலையில், இரண்டாவது செஷனின் கடைசி ஓவரின்போது சௌதீ பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் அடித்தது 65 (125) ரன்கள் ஆகும். தற்போது , விருத்திமான் சாஹா 22 (69) ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். நான்காவது நாள், இரண்டாவது செஷன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தற்போது 167/7 ரன்கள் சேர்த்து 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 275 ரன்கள் முன்னிலை பெற்றால்போதும், நியூசிலாந்தை வீழ்த்த முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
ஷ்ரேயஸ் சாதனை:
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்திருந்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அரை சதம் எடுத்து விளையாடி வருகிறார். இதன்மூலம், இந்திய அணிக்காக அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதற்குமுன் 1970-ல் கபில் தேவ் அறிமுக டெஸ்டில் 65, 67* ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்கள் டாம் லதாம் 95 (282), வில் யங் 89 (214) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். மற்றவர்கள் யாரும் சிறப்பாக சோபிக்காததால், நியூசிலாந்து அணி 296/10 ரன்கள் சேர்த்து, 49 ரன்கள் பின்தங்கியது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 84/5 ரன்கள் சேர்த்து, 133 ரன்கள் முன்னிலை பெற்றபோது நான்காவது நாள் முதல் செஷன் முடிவுக்கு வந்தது.
நான்காவது நாள் 2ஆவது செஷன்:
முதல் செஷன் முடிவின்போது ஷ்ரேயஸ் ஐயர் 18 (51), ரவிச்சந்திரன் அஸ்வின் 20 (35) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். இரண்டாவது செஷனின் துவக்கத்திலும் பார்ட்னர்ஷிப் தொடர்ந்தது. இதனால் இந்திய அணி 100 ரன்களை கடந்து சிறப்பான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. அந்த சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 32 (62) விக்கெட்டை கைல் ஜேமிசன் எடுத்துக்கொடுத்தார்.
அடுத்து, நீண்ட நேரத்திற்கு விக்கெட் எதுவும் விழவில்லை. ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அசத்தினார். இந்நிலையில், இரண்டாவது செஷனின் கடைசி ஓவரின்போது சௌதீ பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் அடித்தது 65 (125) ரன்கள் ஆகும். தற்போது , விருத்திமான் சாஹா 22 (69) ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். நான்காவது நாள், இரண்டாவது செஷன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தற்போது 167/7 ரன்கள் சேர்த்து 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 275 ரன்கள் முன்னிலை பெற்றால்போதும், நியூசிலாந்தை வீழ்த்த முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
ஷ்ரேயஸ் சாதனை:
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்திருந்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அரை சதம் எடுத்து விளையாடி வருகிறார். இதன்மூலம், இந்திய அணிக்காக அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதற்குமுன் 1970-ல் கபில் தேவ் அறிமுக டெஸ்டில் 65, 67* ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.