புதுடெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியின் கடைசி ஓவரை வீசிய பாண்டியா, கேப்டன் கோலிக்கு ஆறுதல் சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதன் முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.
இதனால் திருவனந்தபுரத்தில் நடந்த மூன்றாவது டி-20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்ப அப்போட்டியில் மழைக்குறுக்கிட, 8 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது.
இதனால் போட்டியின் ஒவ்வொரு பந்திலும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்திய வீரர் பாண்டியா, கடைசி ஓவரை சிறப்பாக வீசி, 6 ரன்னில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஆனால் இந்த ஓவரின் மத்தியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோமே அடித்த பந்து, பாண்டியாவின் இடது கையில் பலமாக தாக்கியது.
ஆனால் பாண்டியா தொடர்ந்து பந்து வீசினார். இதனால் கோலி மிகவும் கவலைப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி கூறுகையில்,’ மூன்றாவது பந்தில் பாண்டியா காயமடைந்தவுடன், எங்கு ஒருவேளை நான் பந்துவீசும் நிலை ஏற்பட்டுவிடுமோ என கவலைப்பட்டேன். ஆனால் பாண்டியா, நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன், என்றார். அப்போது தான் எனக்கு நிம்மதி.’ என்றார்.
New Delhi: In a rain-curtailed third T20 international between India and New Zealand, it all came down to the final six balls where Hardik Pandya was asked to defend 19 runs in the eighth over of the innings.
இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதன் முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.
இதனால் திருவனந்தபுரத்தில் நடந்த மூன்றாவது டி-20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்ப அப்போட்டியில் மழைக்குறுக்கிட, 8 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது.
இதனால் போட்டியின் ஒவ்வொரு பந்திலும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்திய வீரர் பாண்டியா, கடைசி ஓவரை சிறப்பாக வீசி, 6 ரன்னில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஆனால் இந்த ஓவரின் மத்தியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோமே அடித்த பந்து, பாண்டியாவின் இடது கையில் பலமாக தாக்கியது.
ஆனால் பாண்டியா தொடர்ந்து பந்து வீசினார். இதனால் கோலி மிகவும் கவலைப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி கூறுகையில்,’ மூன்றாவது பந்தில் பாண்டியா காயமடைந்தவுடன், எங்கு ஒருவேளை நான் பந்துவீசும் நிலை ஏற்பட்டுவிடுமோ என கவலைப்பட்டேன். ஆனால் பாண்டியா, நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன், என்றார். அப்போது தான் எனக்கு நிம்மதி.’ என்றார்.
New Delhi: In a rain-curtailed third T20 international between India and New Zealand, it all came down to the final six balls where Hardik Pandya was asked to defend 19 runs in the eighth over of the innings.