ஆப்நகரம்

எந்த இடமா இருந்தாலும்... என்ன ரோலா இருந்தாலும்... இந்த பையன் கில்லி மாதிரி சொல்லி அடிக்கிறான்... லட்சுமண் பாராட்டு!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய கே.எல் ராகுலை விவிஎஸ் லட்சுமண் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 26 Jan 2020, 6:24 pm
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil KL Rahul


இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி ஹாமில்டனில் ஜனவரி 29இல் நடக்கிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் தொடர்ந்து அசத்தி வரும் ராகுலை முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “கடைசியாக 5 டி-20 இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் அடித்து மிரட்டியுள்ளார் ராகுல். அவரின் செயலாக்கம் மிகவும் கவரும் வகையில் உள்ளது. மேலும் எந்த இடத்திற்கு ஏற்ப சிறப்பாக மாற்றிக்கொள்ளும் திறமையும் ராகுலிடம் சிறப்பாக உள்ளது. ஸ்ரேயஸ் ஐயரும் சிறப்பாக ராகுலுக்கு கைகொடுத்தார்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்