ஆப்நகரம்

World cup 2019: பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம் கலைத்த விராட் கோலி

பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத் தயார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2019, 1:53 pm
விசாகப்பட்டிணம் : பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத் தயார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kohli 1


இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் வரும் ஆஸ்திரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்கு முந்தைய கேப்டன்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைப்பெற்றது.
இதில் கேப்டன் விராட் கோலி பேசியதாவது, “புல்வாமா தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



இந்திய அரசு என்ன சொல்கிறதோ அதற்கு இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ கட்டுப்படும். இந்திய அணி வீரர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளோம். அரசின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.” என கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்