ஆப்நகரம்

கனமழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா போட்டி ரத்து!

தர்மசாலா: இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோத இருந்த முதல் டி-20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Samayam Tamil 16 Sep 2019, 7:48 am
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. ஆனால் கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் காரணமாக ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil IND vs SA


மழை குறுக்கீடு...
இன்றைய போட்டியின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே போல கனமழை பெய்தது. தொடர்ந்து கனமழை நீடிக்க, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா ஆதிக்கம்
ஒட்டு மொத்தமாக இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 8 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்திய அணி
விராட் கோலி (கே), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, தீபக் சகார், ராகுல் சகார், கலீல் அஹமது, நவ்தீப் சாய்னி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்