ஆப்நகரம்

பவுலிங்,பேட்டிங்கில் அசத்திய இந்தியா - தெ.ஆ அணிக்கு ஆப்பு வைக்குமா இந்தியா

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 49/1 ரன்கள் எடுத்து 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 25 Jan 2018, 9:48 pm
ஜோகனஸ்பெர்க் : இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 49/1 ரன்கள் எடுத்து 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
Samayam Tamil india vs south africa 3rd test day 2 as it happened
பவுலிங்,பேட்டிங்கில் அசத்திய இந்தியா - தெ.ஆ அணிக்கு ஆப்பு வைக்குமா இந்தியா

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

42 ரன்கள் முன்னிலை :
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் விளையாடிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 49 ரன்களை எடுத்துள்ளது. பார்த்திவ் படேல் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

தற்போது முரளி விஜய் 13, கே எல் ராகுல் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Jasprit Bumrah took his maiden five-wicket haul in Test cricket
South Africa were all out on 194 in their first innings
The hosts took a slim lead of 7 runs

அடுத்த செய்தி

டிரெண்டிங்