ஆப்நகரம்

முன்னாடியே டெஸ்ட் போட்டியை நிறுத்தியிருக்க வேண்டும் - தோல்விக்கு பின் புலம்பும் டீன் எல்கர்

ஜொகனஸ்பெர்க்கில் நடைப்பெற்ற 3வது டெஸ்ட் போட்டி பிட்ச் சரியில்லாததால் முன்னாடியே நிறுத்தி இருக்க வேண்டும் என அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் தோல்விக்கு பின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2018, 5:53 am
ஜொகனஸ்பெர்க்கில் நடைப்பெற்ற 3வது டெஸ்ட் போட்டி பிட்ச் சரியில்லாததால் முன்னாடியே நிறுத்தி இருக்க வேண்டும் என அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் தோல்விக்கு பின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil india vs south africa dean elgar says the third test should have been called off
முன்னாடியே டெஸ்ட் போட்டியை நிறுத்தியிருக்க வேண்டும் - தோல்விக்கு பின் புலம்பும் டீன் எல்கர்


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.

பின்னர் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மோசமான பிட்ச் :
ஜொகனஸ்பெர்க் மைதானத்தில் நடைப்பெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது எல்லா பேட்ஸ்மேன்களும் விளையாட சிரமப்பட்டனர். பல முறை வீரர்கள் கணிக்க முடியாத வகையில் பந்து எகிறி வந்து உடலை தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் போட்டி முன்னதாக கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிந்தது.

எல்கர் புலம்பல் ;
நாங்களும் மனிதர்கள் தானே எத்தனை தடவை பந்தால் அடிவாங்குவது. எம் ஹெல்மேட் மீது தாக்கிய போதே போட்டியை நிறுத்தியிறுக்க வேண்டும் என புலம்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்