ஆப்நகரம்

கோலி ராசியை தூள் தூளாக்குமா இலங்கை அணி... இன்று இந்தூரில் இரண்டாவது மோதல்!

இந்தூர்: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.

Samayam Tamil 7 Jan 2020, 12:05 pm
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கவுஹாத்தில் நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாகவும் சரியான பராமரிப்பும் இல்லாத காரணத்தாலும் போட்டி ஒருபந்து கூட வீசப்படாதநிலையில் ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil Ind vs SL


பேட்டிங் பலம்
நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள துவக்க வீரர் ஷிகர் தவனுக்கு ஏற்னகவே ஒரு வாய்ப்பு வீணாகிவிட்டது. இதனால் தவன் இப்போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மிரட்டுவாரா பும்ரா
பவுலிங்கில் யார்க்கர் கிங் பும்ராவின் வருகை இந்திய அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. ஆனால் உலகக்கோப்பை வரை இவர் மீண்டும் காயமடையாமல் இருக்க வேண்டிய அவசியம். இவருடன் சாய்னி, ஷார்துல் தாகூர் கைகொடுக்க முயற்சிக்க வேண்டும்.


கைகொடுப்பார்களா சீனியர்கள்
இலங்கை அணியை பொறுத்தவரையில் சீனியர் வீரர்களான் மாத்யூஸ் , மலிங்கா அகியோர் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்த கைகொடுக்க வேண்டியது அவசியம். பேட்டிங்கில் குசல் பெரேரா நம்பிக்கை அளிக்கிறார். பவுலிங்கில் அந்த அணி பெரும்பாலும் கேப்டன் மலிங்காவையே நம்பியுள்ளது.

யாருக்கு சாதகம்
இந்துார் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் இதனால் இன்று ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இங்கு நடந்த ஒரே ஒரு டி–20 போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வானிலை

இன்றைய இரண்டாவது போட்டி நடக்கும் இந்துாரில் மழை வர வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இன்று போட்டி முழுமையாக நடக்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்