ஆப்நகரம்

Ind vs SL 3rd T20: 81 ரன்களுக்கு ஆல்-அவுட்…படுமோசமான சாதனை படைத்த இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Samayam Tamil 29 Jul 2021, 9:44 pm
இந்தியா, இலங்கை இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின், முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கும் இருக்கிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, படுமோசமாகச் சொதப்பியது.
Samayam Tamil இலங்கை அணி


இந்திய அணியில் ஓபனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். தவன், சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் (9), சஞ்சு சாம்சன் (0), நிதிஷ் ராணா (6) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஓபனர் ருதுராஜும் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களும் சிறப்பாக சோபிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் (16), ராகுல் சஹார் (5), வருண் சக்ரவர்த்தி (0) படுசோமாக சொதப்பினர். குல்தீப் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 23 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 81/8 ரன்கள் மட்டும் சேர்த்தது.

வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

படுமோசமான சாதனை:


இந்திய அணி 70 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 39/5 ரன்கள் மட்டுமே அடித்தது. இதற்குமுன், 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 32/5 ரன்கள் அடித்திருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்